உயிர் பறிக்கும் பன்றி காய்ச்சல் | இயற்கை வைத்தியம்!

இந்தியாவில் விரைவாக பரவிவரும் காய்ச்சல் பன்றி காய்ச்சல்பன்றி காய்ச்சல் என்றாலே எல்லோரும் பயந்து நடுங்குகின்றனர். உயிரை பறிக்க கூடிய காய்ச்சல் என்று உதறல் எடுத்து நடுங்குகின்றனர்.
panri kaichal virus
பன்றி காய்ச்சல் வைரஸ் - சுவைன் ஃப்ளூ

பன்றி காய்ச்சல் அவ்வளவு கொடுமையானதா? உயிர் பறிக்கும் அளவிற்கு கொடுமையானதா என்றால், ஆம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சாதாரண காய்ச்சல் வந்தால் கூட பன்றி காய்ச்சலாக இருக்குமோ என்ற சந்தேகமே பலரின் பயத்திற்கும் காரணம். பயம் வேண்டாம். பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் இவைதான்.

பன்றி காய்ச்சல் அறிகுறிகள்


  • இடைவிடாத காய்ச்சல்
  • மூக்கில் நீர்வடிதல்
  • தொண்டையில் வலி
  • வயிற்று போக்கு
  • மயக்கம்
  • பசியின்மை
  • சளி தொல்லை
  • சாப்பாடு மீது வெறுப்பு
  • வாந்தி எடுத்தல்

உங்களுக்கு இப்படி இருந்தால் உடனடியாக தக்க மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டால் பன்றி காய்ச்சல் பறந்து போய்விடும்.

பன்றி காய்ச்சலுக்கு இயற்கை வைத்தியம்


உயிர் பறிக்கும் பன்றி காய்ச்சலுக்கு இயற்கை வைத்திய முறை உண்டு.

சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு "யுகி' என்ற முனிவர் கண்டுபிடித்த "கபசுரக் குடிநீர்' (தூள்) சித்த மருந்து பலன் அளிக்கும். நிலவேம்பு, கண்டுபாரங்கி என்று அழைக்கப்படும் சிறுதேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை வேர், கற்பூரவள்ளி, சீந்தில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், அக்ரஹாரம் ஆகிய மூலிகைகளை சம அளவில் எடுத்து "கபசுரக் குடிநீர்' என்ற கஷாயம் தயாரிக்கப்படுகிறது. இந்த "கபசுரக் குடிநீர்' அனைத்து சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

தொண்டை கரகரப்பு ஏற்படும் ஆரம்ப நிலையில் சித்த மருத்துவரிடம் சென்று "தாளிசாதி வடகம்' (மாத்திரை) சாப்பிட்டாலும் நிவாரணம் கிடைக்கும்.

பன்றிக் காய்ச்சல் என உறுதிப்படுத்தப்படும் நிலையில் "கபசுரக் குடிநீரை' கஷாயமாக காய்ச்சிக் குடித்தால் பலன் கிடைக்கும்.

அதாவது, நான்கு தேக்கரண்டி தூளை, 200 மில்லி லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, வடிகட்டுவதன் மூலம் கிடைக்கும் 60 மில்லி லிட்டர் கஷாயத்தை வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாள்கள் குடிக்க வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் இந்த கஷாயத்தை குடித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் பன்றிக் காய்ச்சல் குணமாகும்.

மோசமான பன்றி காய்ச்சல் நம் நாடுகளில் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. வெப்பமிகு நாடுகளில் பன்றி காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவும் விகிதம் குறைவாக இருக்கும். எனினும் இது குறித்த விழிப்புணர்வு தேவை.

குழந்தைகளுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள்

குழந்தைகளுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டால் சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்.

  • தொடர்ந்த ஜுரம், சளி மற்றும் மூச்சுத் திணறல்
  • மூச்சு விட சிரமப் படுவார்கள்
  • உடல் தோல் ஒரு வித நீல நிறமாக இருக்கும். (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்)
  • தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பார்கள்.
  • அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது சகஜமாக இல்லாமல் சோர்ந்து இருத்தல்.
  • தூக்கி கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல்.
  • தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படும்.

மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

Tags: பன்றிக் காய்ச்சல், PANTRI KAICHAL, 
Share on Google Plus

About ABELIA

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment